முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை மாற்றிப் போட்டுக் கொண்டால் என்னவாகும்..?? - Tamil Crowd (Health Care)

முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை மாற்றிப் போட்டுக் கொண்டால் என்னவாகும்..??

 முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை மாற்றிப் போட்டுக் கொண்டால் என்னவாகும்..??

முதல் டோஸ் கோவிஷீல்டு, இரண்டாவது டோஸ் கோவாக்சின் என மாற்றிப் போட்டுக் கொண்டால் அதிக பக்க விளைவுகள் ஏற்படும், அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று இருவேறு தரவுகள் இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்சின் வி தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது.

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசிக்கான வழிகாட்டுதலின்படி முதல் தவணையில் போட்ட ஊசியே இரண்டாவது தவணையிலும் செலுத்தப்பட்டு வருகிறது . ஆனால் உத்தர பிரதேசத்தில் 20 பேருக்கு முதல் தவணையில் போட்ட ஊசிக்கு பதிலாக இரண்டாம் தவணையில் வேறு ஊசி போடப்பட்டது .

இப்படியான சம்பவங்கள் நாட்டின் சில இடங்களில் அரங்கேறியுள்ளன . இப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இரண்டு டோஸ்களுக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் போடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எதிர்ப்பணுக்கள் அதிகளவில் உருவாகுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து பதில் அளித்துள்ள எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, முதல் டோஸுக்கு ஒரு தடுப்பு மருந்தையும், இரண்டாவதாக வழங்கும் பூஸ்டர் டோஸுக்கு இன்னொரு தடுப்பு மருந்தையும் வழங்கினால் பக்கவிளைவுகள் சற்று அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் எதிர்ப்பணுக்களை சற்று அதிகமாக உருவாக்குவதாகவும் சில தரவுகளும் கூறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். எனவே இதை உறுதிப்படுத்த நிறைய தரவுகள் வேண்டும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இப்போதைக்கு, கோவாக்சின், கோவிஷீல்டு மாறிமாறி கொடுப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இருப்பினும் இதனை கொள்கை முடிவாக செயல்படுத்த நிறைய தரவுகள் தேவைப்படுகிறது. அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் ஒருசில மாதங்களில் இதுதொடர்பான முடிவை அரசு வெளியிடும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Comment