சூப்பர்..!! இந்த மருந்தை எடுத்துக்கொண்டால்- ஆக்ஸிஜன் தேவை குறையும்.. !!
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் நாள் தோறும் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக அதிகரித்து வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்..?? என்னென்ன இயங்காது..??
வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்தினால் நல்ல பயன் தருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. ஆன்டிவைரலுடன் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவீதம் பேர் நாள் 7 க்குள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இந்த சிகிச்சையானது நோயாளிகளுக்கு துணை ஆக்ஸிஜனின் மணிநேரத்தையும் குறைக்கிறது என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க…
10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு -சென்னையில் வேலை..!!
நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது, விராஃபின் எடுத்து கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சுவாச மண்டல பாதிப்பை குறைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பெரியளவில் ஆக்ஸிஜன் தேவை ஏற்படாது. கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்த சுவாசக் கோளாறு மற்றும் தோல்வியை இந்த ஆன்டிவைரல் கட்டுப்படுத்த முடியும் என்பதை சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று ஜைடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.